மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும்.அதன்படி 04.12.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 18 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் நேரடியாக தெரிவித்து புகார் மனுவை அளித்தனர்.

மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *