கனிம வள கொள்ளையை தடுக்க கோரி வேடசந்தூர் அருகே சாலை மறியல் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பிணத்தையும் சேர்த்து ஜேசிபி மூலம் மண் அள்ளியுள்ளனர். இதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.