விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கல்லூரி அரங்கில் நடந்த முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சென்னை ரெய்குன் மேனுபாக்சரிங் பிரைவேட் லிட்., நிறுவன பிரதிநிதிகள் மேலாளர் ரமேஷ், பார்த்திபன், அஜய் ஆகியோர் முகாமில் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய நேர்காணல் நடத்தி 44 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.
மாணவர்களை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கர், துணை முதல்வர் டாக்டர் ஜெகன், வேலைவாய்ப்பு அலுவலர் மனோ சந்தர் மற்றும் துறை தலைவர்கள் பாராட்டினர்.