நாம் ஏன் இரவில் தூக்கமாகிறது? ஏன் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறோம்? ஏன் சில நேரங்களில் பசிக்கிறது? இவை அனைத்திற்கும் காரணம் நம் உடலின் உள்ளக கடிகாரம் – சர்க்கேடியன் ரிதம் எனப்படும் இயற்கை ஒழுங்கு.
இந்த உடல்கடிகாரம் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழிக்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எப்போது ஹார்மோன்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதற்கெல்லாம் நேரம் காட்டுகிறது.
ஆனால் இன்றைய வாழ்க்கை முறை – இரவு நேரம் வரை மொபைல், கணினி பயன்படுத்துவது, இரவு வேலை நேரங்கள், ஒழுங்கற்ற உணவு, தூக்கக் குறைவு – இவை அனைத்தும் இந்தக் கடிகாரத்தை சீர்குலைக்கின்றன. அதன் விளைவாக நம் உடலின் ஹார்மோன்கள் ஒழுங்கு இழந்து பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
சர்க்கேடியன் ரிதம் என்றால் என்ன?
எல்லா செல்களிலும் சிறிய “கடிகாரம்” உள்ளது. அவற்றை ஒருங்கிணைக்கும் பெரிய கடிகாரம் மூளையில் உள்ள சுப்ராசியாஸ்மாட்டிக் நியூக்ளியஸ் (SCN) பகுதியில் உள்ளது.
- காலைப் பொழுது, சூரியஒளி மூளைக்கு “விழிக்க நேரம் வந்துவிட்டது” என்று அறிவிக்கிறது. உடல் சுறுசுறுப்பைத் தரும் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
- இரவு, இருள் வந்ததும், உடல் மெலட்டோனின் என்ற தூக்க ஹார்மோனை வெளியிடுகிறது.
இந்த ஒழுங்கு தூக்கத்தையே மட்டுமல்லாது பசி, செரிமானம், உடல் வெப்பநிலை மற்றும் பல ஹார்மோன்களின் சுரப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
ஹார்மோன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
கார்டிசால் – ஆற்றல் மற்றும் மனஅழுத்த ஹார்மோன்
சாதாரணமாக காலை அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும். ஆனால் தூக்கம் கெட்டுவிட்டால், இந்த ரிதம் தட்டையாகிவிடும். இதனால் சோர்வு, மனஅழுத்தம், சர்க்கரை நோய் அபாயம் ஏற்படும்.
மெலட்டோனின் – தூக்க ஹார்மோன்
இரவில் அதிகமாகச் சுரக்க வேண்டும். ஆனால் இரவு நேரம் மொபைல், டிவி போன்ற பிரகாசமான ஒளி இதைத் தடுக்கிறது. இதனால் தூக்கமின்மை, உடல் எதிர்ப்பு சக்தி குறைவு, பெண்களில் மாதவிடாய் சீர்கேடு ஏற்படலாம்.
இன்சுலின் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு
பகலில் உடல் சர்க்கரையை நன்றாகக் கையாளும். ஆனால் இரவில் அதிகமாக சாப்பிட்டால், உடல் அதைச் சமாளிக்க முடியாமல் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். இது நீண்ட காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை உயர்த்தும்.
பசி ஹார்மோன்கள் (லெப்டின் & க்ரெலின்)
- லெப்டின் நமக்கு பூர்த்தி உணர்வைத் தருகிறது.
- க்ரெலின் பசியைத் தூண்டும்.
தூக்கமின்மை ஏற்பட்டால், லெப்டின் குறைந்து க்ரெலின் அதிகரிக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவோம் → எடை கூடும்.
பாலியல் மற்றும் பிரசவ ஹார்மோன்கள்
பெண்களில் உடல்கடிகாரம் கெட்டால் மாதவிடாய் சீர்கேடு, கருத்தரிக்கச் சிரமம், கர்ப்பத்தில் பிரச்சனைகள் ஆகியவை உருவாகலாம். இரவு வேலை செய்யும் பெண்களில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
உடல்கடிகாரத்தை கெடுக்கும் காரணங்கள்
- இரவு வேலை நேரம் அல்லது அடிக்கடி மாறும் பணி நேரம்
- அடிக்கடி வெளிநாடு பயணம் (ஜெட் லாக்)
- இரவு நேரம் வரை மொபைல், டிவி பார்க்குதல்
- ஒழுங்கற்ற தூக்க நேரம் (வார நாட்களில் குறைவு, வார இறுதியில் அதிகம் – “சோஷியல் ஜெட் லாக்”)
- இரவு உணவை அதிகமாக சாப்பிடுதல்
ஏற்படும் நோய்கள்
நீண்ட காலமாக உடல்கடிகாரம் கெட்டால், ஆராய்ச்சிகள் காட்டியிருப்பதாவது:
- கொழுப்பு, எடை அதிகரிப்பு
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம், இதய நோய்
- மனஅழுத்தம், மனச்சோர்வு
- மாதவிடாய் பிரச்சனைகள், கருத்தரிக்க முடியாமை
- உடல் எதிர்ப்பு சக்தி குறைவு, சில புற்றுநோய்கள் அதிக அபாயம்
உடல்கடிகாரத்தை பாதுகாக்கும் வழிகள்
- ஒழுங்கான தூக்கம் – விழிப்பு நேரம் வைத்துக்கொள்ளுங்கள் (வார இறுதியிலும்).
- காலை சூரிய ஒளி பெறுங்கள் – உடல்கடிகாரம் சரியாக இயங்கும்.
- இரவு நேரம் மொபைல், பிரகாசமான ஒளி தவிர்க்கவும் – மெலட்டோனின் சுரக்க உதவும்.
- உணவு நேரம் ஒழுங்காக இருக்கட்டும் – இரவு நேரம் அதிகமாகச் சாப்பிட வேண்டாம்.
- உடற்பயிற்சி செய்யுங்கள் – காலை அல்லது மதியம் சிறந்தது.
- இரவு வேலை செய்பவர்கள் – ஒரே நேரத்தை நீண்ட நாட்கள் தொடருங்கள். மாறிமாறி வேலை நேரம் அதிக பாதிப்பை தரும். தூங்கும் இடத்தை இருள் மற்றும் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஏன் இது முக்கியம்?
நம் முன்னோர்கள் சூரிய உதயத்துடன் எழுந்து, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு ஓய்வு எடுத்தார்கள். அந்த இயற்கை ஒழுங்கு நம் உடலுக்கேற்றதாக இருந்தது. இப்போது மின்னொளி, தொழில்நுட்பம், வேகமான வாழ்க்கை – இந்த ஒழுங்கை குலைத்துவிட்டது.
அறிவியல் ஆய்வுகள் கூறுவது: சிறிய மாற்றங்களே போதும் – ஒழுங்கான தூக்கம், சரியான உணவு நேரம், இயற்கை ஒளியை மதிப்பது – இவை ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.
முடிவுரை
உடல்கடிகாரம் தூக்கத்தையே கட்டுப்படுத்துவதில்லை. அது ஹார்மோன்கள், சீராய்வு, மனநிலை, பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் எல்லாவற்றையும் வழிநடத்துகிறது.
உடல்கடிகாரம் கெட்டால் → ஹார்மோன்கள் கெடும் → உடல்நலம் கெடும்.
ஆகவே, உடல் சொல்லும் நேரத்தை மதியுங்கள். இயற்கை ஒழுங்கோடு வாழுங்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
Dr. S. ABINAYA BNYS, MD
யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்