வலங்கைமான் முகையதீன் பெரிய பள்ளிவாசல் தாருஸ்ஸலாம் அரபி மக்தப் மதரஸர ஆண்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் முகையதீன் பெரிய பள்ளிவாசல் தாருஸ்ஸலாம் அரபி மக்தப் மதரஸா ஆண்டுவிழா பி.கே.இ. அப்துல்லா தலைமையில், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், மௌலவி நாகூர் கனி, அல் கைரி முன்னிலையிலும், மதரசா மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது,
சிறப்பு அழைப்பாளராக தமீமுன் அன்சாரி கலந்து கொண்டார். பெண்களுக்கான பயான் நிகழ்ச்சியில் நிஸ்மாஹசின், ரேஸ்மா பானு கலந்து கொண்டனர், முன்னதாக ஜமாத் பொதுச் செயலாளர் யாகூப் சலீம் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு பயான் செய்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் சைக்கிள், குக்கர் மற்றும் இதர பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது, இதில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் அமானுல்லா, ஹரஜாமைதீன், பக்கீர் மைதீன், கமிட்டி உறுப்பினர்கள் நூறு முஹம்மது, உதுமான் அலி, அகமது மைதீன், பெரோஸ் கான், ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முகைதீன் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அமீரக வலங்கை ஜமாத் இஸ்லாமிய இளைஞர் பேரவை செய்திருந்தனர், ஜமாத்தின் பொருளாளர் ரஹீமுதின் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.