- பரமத்தி வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழாநாமக்கல் மாவட்டம்.பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மூலவர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்த கோடி பெருமக்கள் கலந்து கொண்டு பலவகை பூக்களை தட்டுகளில் நிரப்பி மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் க்கு கொண்டு வந்து அம்மன் திருமேனி முழுவதும் வண்ண வண்ண தாமரை மல்லிகைப்பூ மரிக்கொழுந்து வெள்ளை சம்பங்கி, அரளி போன்ற ஏராளமான… Read more: பரமத்தி வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா
- சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடுஎஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டை நாதர், தோனியப்பர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர் .சித்திரை பிரமோற்சவம் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழா திருமுலைப்பால், சகோபுரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உற்சவத்தில் 13ம் நாள் தெப்ப… Read more: சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு
- நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றிகோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு குறித்து சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர். நகராட்சி ஆணையரும் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கடையை அகற்ற முடியாத சூழ்நிலை இருந்தது. அதற்குள்ளாக அதிகாரம் படைத்தவர்கள் ஆக்கிரமிப்பினை அகற்ற முட்டுக்கட்டை போட்டது மட்டுமின்றி, ஆணையரை புகார் கொடுக்க வைத்து மிரட்டி பார்த்தனர். மேலும் ஜனநாயக… Read more: நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
- மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்புமாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:மாவட்ட அளவிலான இந்த கோடைகால பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் பள்ளி,… Read more: மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு
- கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம் ஒன்று இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் சார்பில் வரையப்பட்டது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி,) சங்கத்தினர் நாட்டின் தேசிய வடிவமைப்பு கொள்கை உருவாக்குவதிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்களை நடத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றனர். நாடு முழுவதும்… Read more: கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்
- பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிபெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி பெரம்பலூர் துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சார் ஆட்சியர் .சு.கோகுல் தலைமையில் இன்று (25.04.2024) நடைபெற்றது. 2023-2024-ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின்கீழ்… Read more: பெரம்பலூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழாதிருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி முதல் நாளில் இன்று குழந்தைகள் கோகுல கிருஷ்ணர் வேஷம் அணிந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அனைத்து குழந்தைகளும் பெரியோர்களும் தாய்மார்களும் அப்போது மக்கள் அனைவரும் இந்த திருவிழாவை திரளாக வந்து கண்டு களித்தனர் முதல் நாளில் சொற்பொழிவாளர் பார்த்திபன் முன்னிலையில் மகாபாரத விரிவுரை ஸ்ரீமன் வெங்கட்ரமணன் விரிவுரையாளர் இவர்கள்… Read more: திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா
- ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா!ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா! ஏராளமான பெண்கள் பங்கேற்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கர் கோவில் அருகே உள்ள மகளிர் மற்றும் சிறார் நூலகத்தில் வைத்து உலக புத்தக வாசிப்பு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரதி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி மகேஷ் தலைமையில் கவிஞர் ஆனந்தி, மைதிலி கவிஞர், ரமணி மாடசாமி உள்பட பலர் பங்கேற்று புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், புத்தகம் வாசிப்பதால் உலகறிவு மற்றும் குடும்பத்தை வழிநடத்தும் வழிமுறைகள் குறித்தும்… Read more: ராஜபாளையத்தில் உலக புத்தக வாசிப்பு தின விழா!
- பண்ணைக்குடி கிராமத்தில்அழகர்மலையானுக்கு அன்னதானம்அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பண்ணைகுடி கிராமத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடித்து கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லக்கூடிய நாளில் ஆண்டுதோறும் பாரம்பரிய வழக்கப்படி கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்படும் அதேபோல் நேற்றும் அங்குள்ள மந்தை திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து கிராம காவல் தெய்வங்களுக்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்திய பின்பு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது .இந்த அன்னதான விழாவுக்கான ஏற்பாடுகளை பண்ணைகுடி கிராம… Read more: பண்ணைக்குடி கிராமத்தில்அழகர்மலையானுக்கு அன்னதானம்
- மோடியின் பேச்சு- சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்ட செயலாளர் தேவாதஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர் ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமரை தகுதி நீக்கம் செய்ய உதவி தேர்தல் அலுவலரிடம் மனு. தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான இலக்கியாவிடம் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்ய மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
- நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனைநீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப மாவட்டத்தில் எதிர்வரும் ( 05:05:2024) ஞாயிற்றுக்கிழமை அன்று ராணிப்பேட்டையில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி அதற்கென முன்னேற்பாடுகள் பாதுகாப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)விஜயராகவன் நீட் தேர்வு… Read more: நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
- ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாராணிப்பேட்டை மேல்விஷாரம் கிழக்கு நகர செயலாளர் விஜி (எ)சித்தார்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பங்கேற்பு :- தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க இராணிப்பேட்டை மேற்கு செயலாளர் அஇஅதிமுக சார்பில்… Read more: ராணிப்பேட்டை அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்’திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கைஅரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம்வகுப்பு படித்து வருகி ன்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது… Read more: அரசு பள்ளி ஆசிரியைகள் 2பேர் சஸ்பெண்ட்’திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை
- கோவையில் வரும் 28-ம் தேதி இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்கோவையில் வரும் 28-ம் தேதி, நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பு சார்பாக மாபெரும் இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது… .ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பினர் இந்தியா முழுவதும் மாற்றுத்ழிறனாளிகள் பயன் பெறும் விதமாக இலவச செயற்கை மூட்டு முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வமைப்பினர் , தமிழகத்தின் முதன் முறையாக கோவையில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தனது முதல் மெகா இலவச… Read more: கோவையில் வரும் 28-ம் தேதி இலவச மாடுலர் செயற்கை மூட்டு முகாம்
- ராமநாதபுரம் அருகே மின்கம்பிமாற்ற லஞ்சம் ஊழியர்கள் கைதுஇராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900/-த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டுதேவிபட்டிணம் மின் உதவி பொறியார் அலுவலகத்தில்பணிபுரியும் வணிக ஆய்வாளர் இரமேஷ்பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார். இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் AEக்கு ரூ.3000/-மும்… Read more: ராமநாதபுரம் அருகே மின்கம்பிமாற்ற லஞ்சம் ஊழியர்கள் கைது
- கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் குடும்பத்தினர் சார்பாக பக்தர்களுக்கு மகா அன்னதானம்கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்… கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து,16ம் தேதி கொடியேற்றம், பூச் சாட்டு, 18ம் தேதி அக்னிச்சாட்டு, 19ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன்… Read more: கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கந்தசாமி ஆர்ட்ஸ் ராஜ மன்னார் குடும்பத்தினர் சார்பாக பக்தர்களுக்கு மகா அன்னதானம்
- கொடிமங்கலத்தில் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழாகொடிமங்கலத்தில் 2500.ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா நடந்தது. சோழவந்தான் மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவில் உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றுக்கு தென்கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குமரன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 2500.ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு நாயக்கர் மன்னார்களால் குடமுழக்கும் நடத்தப்பட்டது. என இக்கோவில் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.மேலும் வடக்கு பார்த்து மூலவர் குமரன் அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில்… Read more: கொடிமங்கலத்தில் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா
- நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வுநிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு. செங்குன்றம் செய்தியாளர் புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ பகுதியில் இயங்கி வரும் நிகோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ள அனைவருக்கும் பல்வேறு இலவச தொழில் திறன் மேம்ப்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன்… Read more: நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு
- திருப்பூரில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை தொடங்கப்பட்டுள்ளதுதிருப்பூர் மாவட்டத்தில் DNC சிட்ஸ் நிறுவனமானது தர்மபுரியை பதிவு அலுவகமாகவும் சென்னையை தலைமை அலுவலகமாக கொண்டு தமிழகமெங்கும் கடந்த 59 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 44வது கிளை திருப்பூர் நெசவாளர் காலனி பி என் மெயின் ரோடு ஐசிஐசிஐ வங்கியின் முதல் தளத்தில் அமைந்துள்ளதுசிறப்பு விருந்தினராக DNC Groups தலைவர் D.C.இளங்கோவன் ,இயக்குனர்கள் மீனா இளங்கோவன் பிரேம் இளங்கோவன் .சினேகா பிரவீன் மற்றும் சாரதா ஸ்கூல் தலைவர் வேலுச்சாமி ,ஸ்ரீ சக்தி சினிமாஸ்… Read more: திருப்பூரில் DNC சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை தொடங்கப்பட்டுள்ளது
- ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பேச்சு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் நால் ரோட்டில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட… Read more: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக இயக்கக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்- முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன்
- ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிகிருஷ்ணகிரிமேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர் தலைமையில்,முன்னிலை ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிஅவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார், பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி மோர் வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்,நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ்… Read more: ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
- பெரம்பலூர் அகரம் சிகூர் ஊராட்சியில் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழாபெரம்பலூர் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றித்துட்பட்ட அகரம் சிகூர் ஊராட்சியில் அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி தலைமையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், கீழப்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், அகரம் சிகூர் ஊராட்சி மன்ற… Read more: பெரம்பலூர் அகரம் சிகூர் ஊராட்சியில் கோடைகால நீர்,மோர் பந்தல் திறப்பு விழா
- தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவுதெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக மாக இருக்கிறது. தெருநாய்கள் சாலைகளின் குறுக்கே பாய்வதால் டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவது தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாடிக்கையாக நடந்து வருகிறது. சில நேரங்களில் தெருநாய்களால் விபத்தில் சிக்குபவர்கள் உயிரிழக்கும்… Read more: தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
- இராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சிஇராமநாதபுரத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல்- 2024க்கான என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் ஒவ்வொரு மாணவ, மாணவியும் கட்டாயம் உயர் கல்வி படிக்க வேண்டும். உயர் கல்வி மூலம் ஒவ்வொருவரும் எதிர்கால இலட்சியத்தை நிறைவேற்ற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், அவர்கள் வேண்டுகோள் விடுத்தார் .
- தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார். தூத்துக்குடி கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார் அதன்படி தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் வட்ட கழக செயலாளருமான… Read more: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்
- தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாதஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான வயல் வெளிகளில் சேற்றில் சுவாமிகளை சுமந்து சென்று ஊர் எல்லையில் பார் வேட்டை வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே… Read more: தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழா
- உதவும் உள்ளங்கள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சிதிருப்பத்தூர் மாவட்டம் சார்பாக ரமேஷ் அவர்கள் உதவு உள்ளங்கள் சார்பாக பந்தல் அமைத்து மனிதநேயம் தலைக்கு செய்வோம் என்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதவும் உள்ளங்களில் இருந்து அனைத்து பொதுமக்களும் நீர் மோர் கூல் கொடுத்தல் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக அலுவலகத்திற்கு பக்கத்தில் குடில் அமைத்து உதவும் உள்ளங்கள் சார்பாக இந்திய ஜனநாயகத்தின் மனிதநேயம் காத்திட செய்திடுவோம் என்று ரமேஷ் அவர்கள் உதவ உள்ளங்கள் சார்பாக பால் கேழ்வரகு கம்பு சோளம் பச்சைப்பயிறு உழுவல் காராமணி… Read more: உதவும் உள்ளங்கள் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
- பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க. வரதராஜன் கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்… இது தொடர்பாக விளக்கம் கொடுப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது…… ராஜஸ்தானில் மோடி பேசியதை மாற்றி… Read more: பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார்
- ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை ஆய்வுஇராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலைப்பணிகளை பார்வையிட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன், அவர்கள் உத்தரவிட்டார்.
- ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல்ஈரோடு பார் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்தல் ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன் வாக்களித்த போது அருகில் தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் ஓ எம் ஆர் .பழனிவேல் இருந்தார்.
- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனுவாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு. கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகளுக்கு 200 ரூபாய் முதல் துவங்கி 1000 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என படகு இல்லம் அமைத்ததில் இருந்தே பலரும்… Read more: வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும்- தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு
- வேடசந்தூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையம் எதிரே கோடைகால வெப்பத்தின் காரணமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். உடன் மாநில அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர்… Read more: வேடசந்தூர் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறையில் உள்ளியிருப்பு போராட்டம்கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவினை மதிக்காமல் நகராட்சி பகுதியில் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தொடரும் ஆக்கிரமிப்பு நகராட்சி கழிப்பிட முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உருவாக்கப்பட்ட கடை சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் நகராட்சி ஆணையர் அறையில் உள்ளியிருப்பு போராட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அடுத்த மாதம் 9ந்தேதி எடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அறிவித்த போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு… Read more: சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் அறையில் உள்ளியிருப்பு போராட்டம்
- திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்புவெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு. திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024-2025ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும்.மேலும் வரும் 30.4.2024ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பெற்று… Read more: திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு
- திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழாவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா நடைபெற்றது, இதற்காக காலை முதலே கோபூஜை, சண்டி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக… Read more: திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா
- கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைதுகோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாதவா ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி கார்த்திக் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் மாரிச்செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான… Read more: கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேர் கைது
- தேனி அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாஅண்ணா திமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி அண்ணா திமுக அமைப்பு செயலாளரும் தேனி மேற்கு அண்ணா திமுக மாவட்ட செயலாளர் எஸ் .டி. கே.ஜக்கையன் ஆலோசனையின் படி அதிமுக – தேவராம் பேரூர் செயலாளர் எஸ் ஜே.சீனிவாசன் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர் மோர் பழங்களை தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி .கே. ஐக்கையன். பொது மக்களுக்கு வழங்கினார்.இதில் பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு… Read more: தேனி அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாதினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. முன்னாள் தமிழக அமைச்சர் வீரமணி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி காந்திபேட்டை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை திருப்பத்தூர் நகர அதிமுக செயலாளர் டி.டி. குமார் தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன்… Read more: திருப்பத்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை. டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர். திருப்பத்தூர் தமிழ்நாட்டில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை மிக பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஏலகிரி மலை ஊராட்சியில் 14 குக் கிராமங்களை உள்ளடங்கிய ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை கால துவங்கிய நிலையில்… Read more: ஏலகிரி மலையில் குடிநீர் பற்றாக்குறை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்
- பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்ப பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்…….. சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட திருக்கோலங்களில் அழகர் காட்சி தந்தார்.நேற்று காலை 8 மணிக்கு மேல் மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். நேற்று மதியம் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு… Read more: பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்
- ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்புகோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர், அவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு, மெடிக்கல், ஐடிஐ, ஜேஇஇ தேர்வு போன்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது என… Read more: ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்துவாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் மாஸ்டர்ஸ் இன் சோசியல் வொர்க் முதுகலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ள டாக்டர் சகாய ஜென்ஸி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார். உடன் அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள்… Read more: ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து
- ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் இயற்கை பண்ணை விவசாயம்ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் இயற்கை பண்ணை விவசாயம் ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற விஞ்ஞானியுடன் தமிழ் சேவா சங்க நிறுவனர் சந்திப்பு ஜப்பானின் இயற்கை பண்ணை விவசாய தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் விருதினை பெற்றவருமான விஞ்ஞானி கோய்வாய் , தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞானசரவணவேல் சந்தித்து இயற்கை பண்ணை விவசாய வழிமுறைகள் பற்றி கலந்துரையாடினார்கள். அப்போது கோய்வாய் ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ( ஜே. ஐ. சி.ஏ), உலகின் பல நாடுகளில்… Read more: ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் இயற்கை பண்ணை விவசாயம்
- தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல்தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல் கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் ராவுத்தர் பிரிவில் உள்ள காலி இடத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதை மிகைப் படுத்தும் வகையில் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் அண்ணாச்சி அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் சுற்று பயணம் மேற்கொண்டார் கொங்கு… Read more: தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 41 வது வணிகர் பாதுகாப்பு மாநாடு வரும் மே 5 ல்
- கம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு. தேனி மாவட்டம் கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் நகராட்சி தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் அச்சிட்டு வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான கம்பம் சாதி க் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் வீதி வீதியாக… Read more: கம்பம் நகரில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
- (no title)ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் இரண்டாவது தெரு பகுதியில் தனிநபர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி கடந்த ஆறு மாதமாக சாலையில் கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வேண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக காமராஜர் இரண்டாவது வார்டு பகுதி பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… Read more: (no title)
- முழுமை பெறாத சாலை சீரமைப்பு பணிகள்பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிக்குளம் – புது அம்மாப்பாளையம் சாலையானது கடந்த வருடம் மழையின்போது சேதமடைந்தது. இதனை சீரமைத்துதரக் கோரி பல்வேறு புகார் மனுக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் முறையாக சரிசெய்யப்படாமல் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் மட்டும் பேட்ஜ் வொர்க் என்று சொல்லக்கூடிய மேற்புறம் மட்டும் ஜல்லி கற்களை நிரப்பி, தார் ஊற்றி சரிசெய்யப்பட்டு வருகின்றது. முழுமையாக சீரமைக்கப்படாமல் இது போன்ற அரை குறை வேலை… Read more: முழுமை பெறாத சாலை சீரமைப்பு பணிகள்
- புழலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்புழலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல். செங்குன்றம் செய்தியாளர் சென்னை புழல் காவாங்கரை மீன் மார்க்கெட் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்று கண்காணிப்பில் இருந்த போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் சிறுசிறு பாக்கெட்டுகளில் கஞ்சாவை கொடுத்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த நபரையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு… Read more: புழலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்
- கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்;- தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டியில் வைத்து, தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர்.செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார்.துணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். கூட்டத்தில் கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், மிகவும் குறுகிய சாலை என்பதால், கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக… Read more: கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
- புழல் ஒன்றிய ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரைடில் 1லட்சம் 13 ஆயிரம் பறிமுதல்சென்னை புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள புழல் ஒன்றிய ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு புள்ளிலையன், விளாங்காடுபாக்கம் ,தீர்த்தங்கரையம்பட்டு, கிரான்ட்லையன் ,அழிஞ்சிவாக்கம் ,சென்றம்பாக்கம் ,வடகரை போன்ற ஏழு ஊராட்சிகளுக்கான அலுவலகப் பணிகள் இங்கு நடக்கும். இந்த அலுவலகத்தில் நில உறுதிப்படுத்துதல் சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு கிடைத்த தகவலில் நேற்று அதிரடியாக மதியம் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட பத்து போலீசார்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்து தீடீரென அலுவலகத்தை… Read more: புழல் ஒன்றிய ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரைடில் 1லட்சம் 13 ஆயிரம் பறிமுதல்
- சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அதிமுக சார்பில் பொது மக்களின் குடிநீர்தாகத்தை தனித்திடும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி திறந்து வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், மானூர் வடக்கு… Read more: சங்கரன்கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார்
- திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், தகவல் கூறினார்வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை/ வெயிலில்இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்.உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் .ஒ.ஆர்.எஸ்(ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர் மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி… Read more: திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
- இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும். தமிழகத்தில் பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 39… Read more: இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்
- வலங்கைமானில் பல ஆண்டாக மூடப்பட்ட உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999 -ம் ஆண்டு உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். 1999 -ம் ஆண்டு முதல்வராக இருந்தால் கருணாநிதி நினைவில் உதித்தது தான் உழவர் சந்தை திட்டம். 1999 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி நேரு… Read more: வலங்கைமானில் பல ஆண்டாக மூடப்பட்ட உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
- மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவுமது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு திருநங்கைக்கு தலையில் வெட்டு.. ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு… திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் பாஷா. இவர் கோவை உக்கடத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு ஹாரூன் பாஷா தனது நண்பன் காளிதாஸ் என்பவருடன் மது போதையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அங்கு வந்த ஹம்சா என்ற திருநங்கையும் மது போதையில் ஹாரூன் பாஷா உடன்… Read more: மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு
- இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.மேலும், இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள்… Read more: இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
- தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள்,… Read more: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்
- நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டுகோவை நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு… கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சியரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர். இது குறித்து பேசிய… Read more: நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வுமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல்-2024 முடிவுற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் அங்கு பணியில் உள்ள காவலர்களிடம்… Read more: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வு
- கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை-விரைந்து கண்டுபிடிக்க கோரி விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனுகோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு வழங்கினார்.. கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் அதே பகுதியில் தங்க நகை தொழில் செய்து வருகின்றனர்.. இருவரும் கோவையிலிருந்து விழுப்புரத்திற்கு தங்க நகைகளை எடுத்து சென்று அங்கு உள்ள நகை கடைகளுக்கு விற்பனை… Read more: கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை-விரைந்து கண்டுபிடிக்க கோரி விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு
- பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தேசெய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் நேற்று தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சியாளர் நித்யானந்தம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி பற்றிய அடிப்படை விதிகளை விளக்கினார். மேலும் பெண்களுக்கு மிகவும் அவசியமானது கராத்தே பயிற்சி என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.… Read more: பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே
- அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாஅலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்பழம், சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார். அருகில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, நகர இணை செயலாளர் புலியம்மாள் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன் கேபிள்பாஸ்கரன், சுந்தர்… Read more: அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கைதிருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை… மதுரை மாவட்டம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்கும் விதமாக திருமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கசாவடி மற்றும் கூத்தையார் குண்டு,சிவரக்கோட்டை,குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் பேரிக்கார்ட் தடுப்பு அமைத்து அதில் அதிநவீன சோலார் லைட் பொருத்தி விபத்துகளை தடுக்கவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்.இன்று திருமங்கலம் ரோந்து வாகன போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில… Read more: திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை
- கமுதி பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியில் உணவுத் திருவிழாகமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் தங்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினார். கல்லூரி தாளாளர் அகமது யாசின், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் ரமாபிரபா உள்ளிட்டோர் உணவுகளை பார்வையிட்டு ருசித்து மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
- ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்- தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குப்பை எரிக்கப்படும் இடம் அரிகிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை இடம் செயல்பட்டு வருகிறது அங்கு அதனை பயன்படுத்தாமல் குப்பைகளை எரித்து வருகின்றது… Read more: ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்- தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
- கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைதுகடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது.இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, கீழக்கரை 500 ப்ளாட் தெரு மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக கீழக்கரை காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மேற்படி இடத்திற்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த முகம்மது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகிய சகோதரர்களை விசாரித்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களின் வீட்டிலிருந்து 31… Read more: கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
- மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாஅலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், மற்றும் தண்ணீர்பழம், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளைபிஞ்சு,… Read more: மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைதமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் ச.வளர்மதி இஆப. தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனார் அவர்களின் 113 வது பிறந்த தினத்தை ஒட்டி ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மு வரதராசனார் அவர்களின் திருவுருவ சிலை உடன்கட்டப்பட்டுள்ளகுவி மாட அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அறிஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சித் தலைவர். செய்தி… Read more: தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட கழக பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக… Read more: அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
- காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கோடை வெயிலை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.கோடை வெயிலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைகினங்க காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் ஏற்பாட்டில் கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து இளநீர், தர்பூசணி, மோர்,… Read more: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கோடை வெயிலை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம்கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ் . கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (25.04.2024) அன்று நடைபெற்றது. உடன் நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.தர்மர், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜி.ரமேஷ்குமார், ஓசூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு. பிரபாகரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளனர்.
- மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம்செய்தியாளர் கே பாலமுருகன் மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரி நடு ஏரி தற்போது ஊராட்சி சார்பில் அந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டு வருகிறது அந்த ஏரியை அருகில் இருக்கும் பிரபல தொழிலதிபுரம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கவுன்சிலர் மாண எம் எஸ் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கடையின் பின்புறமாக உள்ள இடத்தில் ஏரியின் மண்ணை உயரமாக கொட்டி… Read more: மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம்
- தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி நேற்று காலை வாடிப்பட்டிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார் அப்போது முன்னாள் அமைச்சரும் எதிர் கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் நடை பயணம் மமேற்கொண்ட. தொண்டருக்கு ஆசி… Read more: தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
- அவிநாசி பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்புதாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு.. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கவுண்டன் பாளையம் வெட்டுகாடு தோட்டம் அருகில் உள்ள பிஏபி வாய்க்கால் மதகு அருகில் பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு.. இந்தப் பிரேதம் திருப்பூர் பெரிய கடை வீதி மஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்ற பையில்… Read more: அவிநாசி பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு
- வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சிவாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் கிராமபுற வேளாண் திட்டத்தின் கீழ்மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்காம் ஆண்டு படிக்கும். மாணவிகள் வாடிப்பட்டி அருகே மண்புழு உரம் தயாரிக்கும் எஸ். எஸ் மண்புழு உரத் தொழிற்சாலைக்கு சென்ற அங்கு மண்புழு உரம், வளப்படுத்தப்பட்ட மண்புழு உரம், சூப்பர் கலவை, தொழு உரம், ஆட்டு எர,… Read more: வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
- வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்புவாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் அதிமுக ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி ஆணைங்கிணங்க கோடைகால வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பொதுமக்கள் தாகம் தணிக்க. பேரூந்து நிலையம் முன்பு மற்றும் சந்தை கேட் எதிரே உள்ளிட்ட இடங்களில் நீர், மோர் பந்தலை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்… Read more: வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு
- வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன்- பிடாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவலங்கைமான்கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற பிடாரி அம்மன்ஆலயதேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு கடந்த 16-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்த்தியுடன்தொடங்கி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் (23-ம் தேதி) பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்… Read more: வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன்- பிடாரி அம்மன் ஆலய தேர் திருவிழா
- பிறந்த நாள் விழா-வாழ்த்துவாழ்த்து” வழக்கறிஞர் பிரியதர்ஷினி உடைய மகள் குழந்தை நட்சத்திரம் லியானாவிற்கு பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் அவர்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்ற பொதுத்தேர்தல்-கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு,அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஆஷா அஜித், தகவல். சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அவர்களின்… Read more: பாராளுமன்ற பொதுத்தேர்தல்-கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
- வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுபத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு, முக்கனிகள் வழங்கி அசத்தினர். திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறுவதை ஒட்டி முக்கனிகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்த முகாம் நிறைவடைந்தது. இதை ஒட்டி பணியை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளை வேலி… Read more: வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
- பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர்,சர்பத், தர்பூசணி பழம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் பொழுது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி… Read more: பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
- கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாசகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தனித்துக்கொள்ள தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க வலியுறுத்தினார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் தலைமையில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனஹள்ளி… Read more: கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணாசகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப்பில் நீர்வரத்து தினசரி வந்து கொண்டிருந்தது, தற்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அலுவலர்கள் தண்ணிர் வீணாவதாக முழுவதுமாக அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் நாள்தோறும் குடிதண்ணீராக, துணிதுவைக்க, குழிக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறோம், அதனால் கொஞ்சமாக… Read more: கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா
- பொள்ளாச்சி உடுமலை சாலையில் போக்குவரத்து மாற்றம்திருப்பூர் பல்லடம் நால்ரோடு சிக்னல் முன்பு பொள்ளாச்சி உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறையால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்பெரம்பலூரில் அ தி மு க கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் இளம்பை.இரா. தமிழ்செல்வன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள்… Read more: பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்
- கோடை வெயிலின் வெப்பத் தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலையின் அளவு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் முதலிடமும் வகிக்கிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.• கோடை வெப்ப தாக்கத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் சோர்வடைதல்,… Read more: கோடை வெயிலின் வெப்பத் தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாண்டி அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் அரசு பொதுமக்கள் தேவையின்றி ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்… Read more: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்
- திருவாரூரில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்தார்திருவாரூரில் அதிமுக தலைமைக் கழக அறிவிப்பின்படி பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிமுக தலைமை கழக அறிவிப்பின்படி, வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள நகர கழக அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக இன்றைய தினம்… Read more: திருவாரூரில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்தார்
- தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைதுசிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு சார்பு… Read more: தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது
- கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழாகல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் 3,000 தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை அரியலூர் Automatically செ.ஜெயராமன் தலைமையில் மாவட்டச்செயலாளர் .ஆ.சண்முகம்அவர்களுடன் இந்நிகழ்வில்மாவட்ட துணைத் தலைவர்.மு.சந்திரசேகர்மாவட்ட பொருளாளர்.இ.எழில் மேனாள் தலைவர்அ.நல்லப்பன் துணைப் புரவலர் சகானா _து.காமராஜ்நியமன துணைத் தலைவர்.க.செல்வராஜ் வழக்கறிஞர்ஆயுள் உறுப்பினர்சக்கரவர்த்தி உள்ளிட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து… Read more: கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
- சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அஇஅதிமுக நகர்… Read more: சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
- பெரம்பலூரில் அதிமுக சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல்கோடைகாலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழகமெங்கும் அஇஅதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்கள் அமைத்திட வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இதன்படி ஏப்ரல் – 25 ஆம் தேதியான இன்று காலை – 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் ,பெரம்பலூர் நகர அஇஅதிமுக சார்பாக ,பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல்… Read more: பெரம்பலூரில் அதிமுக சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல்
- காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் சிறப்பு… Read more: காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!
- ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில்- கரும்பு பயிர்கள் கருகி நாசம்!ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில் அடிப்பதால் கரும்பு பயிர்கள் கருகி நாசம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. வரலாறு காணாத அளவிற்கு வெயில் அடிப்பதால் கால்நடைகள் மிகவும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. கிடை மாடுகள் படும் பாடு சொல்லி மாளாது. ஆயிரக் கணக்கில் அவை மேய்ந்து வருவதால் உரிய தண்ணீர் இல்லாத நிலையில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே… Read more: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில்- கரும்பு பயிர்கள் கருகி நாசம்!
- சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டிடெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது செய்ய வாய்ப்பு. சிவகங்கையில் எச். ராஜா பேட்டி. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை… Read more: சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி