தமிழ்நாடு

  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 95 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 95 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான சிங்காரவேலர் விருது பெற்ற தேனி தமிழ் சங்கத்தின் செயலாளர் சுப்ரமணி அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 4700 மதிப்பிலான செயற்கை கால்கள் இரண்டு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் இந்த… Read more: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
  • உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் பிரபுதாஸ் ஏற்பாட்டில் தொகுதி மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம்
    தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர் மோதி மக்கள் சேவை மைய நிறுவனரும்,உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் வி.பிரபுதாஸ் ஏற்பாட்டில் தொகுதி உள்ள மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் மற்றும் மகளிருக்கு பட்டுப்புடவை தாம்பூலத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினார். மகிழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி மக்கள். மோதி மக்கள் சேவை மைய நிறுவனரும்,உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் வி.பிரபுதாஸ் ஏற்பாட்டில் சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் முன்னிலையில் தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில்மோதி மக்கள் சேவை மைய நிறுவனர்,உருளையன்பேட்டைதொகுதி பாஜக பொறுப்பாளர் வி. பிரபுதாஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை தலைவர் செல்வம்.ஆர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபொது மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார். மேலும் இவ்விழாவில் புதுச்சேரி உருளையான் பட்டை தொகுதிபாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கீதா,லட்சுமி,அகிலாண்டேஸ்வரி,பிரியா,அந்தோணி… Read more: உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் பிரபுதாஸ் ஏற்பாட்டில் தொகுதி மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம்
  • திருப்பாலைத்துறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
    கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டு தம்பதியர்… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறை ஆப்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா காஜா முகையதீன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது இலியாஸ் மிஸ்பாஹி, பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் , பேரூராட்சி நிர்வாகிகள் பூங்குழலி கபிலன் ,பூபதி ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பிரபாகரன் ,அஜய் சர்மா, மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் வருகை புரிந்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வெளிநாட்டு தம்பதியினர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் யோகா, பட்டிமன்றம் சிலம்பாட்டம்,கரகாட்டம் ஒயிலாட்டம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்து காண்போர்களை மெய்சிலிர்க்க வைத்தனர் இவ்விழாவில் மாணவ மாணவிகள் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து… Read more: திருப்பாலைத்துறையில் தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
  • நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    தேசிய சாலைபாதுகாப்பு மாதம் ஜனவரி 2025-ஐ முன்னிட்டு, நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
  • இடும்பன் குளம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி – வேலூர் வட்டம், ஓவியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே, பரமத்தி மற்றும் வேலூர் ஆகிய பேரூராட்சிகளுக்கான, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள், நீர்நிலைகள், குடிநீர், விவசாய நிலம், கால்நடைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருமணிமுத்தாறு, இடும்பன் குளம் மீட்பு குழுவினர், விவசாயிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்