தமிழ்நாடு

  • பரமத்தி வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா
    நாமக்கல் மாவட்டம்.பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மூலவர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்த கோடி பெருமக்கள் கலந்து கொண்டு பலவகை பூக்களை தட்டுகளில் நிரப்பி மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் க்கு கொண்டு வந்து அம்மன் திருமேனி முழுவதும் வண்ண வண்ண தாமரை மல்லிகைப்பூ மரிக்கொழுந்து வெள்ளை சம்பங்கி, அரளி போன்ற ஏராளமான பூக்களை கொண்டு நிரப்பினர். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இறுதியில் மூலவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவில் திருவிழா 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன்  தொடங்கியது. (வெள்ளிக்கிழமை) மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில்… Read more: பரமத்தி வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா
  • சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு
    எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டை நாதர், தோனியப்பர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர் .சித்திரை பிரமோற்சவம் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழா திருமுலைப்பால், சகோபுரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உற்சவத்தில் 13ம் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை உடனாகிய முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்த்த குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று தெப்போற்சவ விழாவில் சுவாமி அம்பாளை தரிசனம் மேற்கொண்டனர்.
  • நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
    கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடை அமைக்கப்பட்டு குறித்து சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி நகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர். நகராட்சி ஆணையரும் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கடையை அகற்ற முடியாத சூழ்நிலை இருந்தது. அதற்குள்ளாக அதிகாரம் படைத்தவர்கள் ஆக்கிரமிப்பினை அகற்ற முட்டுக்கட்டை போட்டது மட்டுமின்றி, ஆணையரை புகார் கொடுக்க வைத்து மிரட்டி பார்த்தனர். மேலும் ஜனநாயக முறையில் முறையிட்டார்கள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர். இப்பிரச்சினை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடை அகற்றப்பட்டுள்ளது.. நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், ஜனநாயக முறையில் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்ற சமூக ஆர்வலர்களுக்கு நன்றி..
  • மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு
    மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:மாவட்ட அளவிலான இந்த கோடைகால பயிற்சி முகாமில் டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் நடைபெற உள்ளது.இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் ,ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும் ,பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் , பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ.200/- செலுத்த வேண்டும். சந்தாத் தொகையானது ரொக்கமாகப் பெறப்படமாட்டாது.பயிற்சி முகாமில் கலந்து… Read more: மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்துகொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு
  • கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்
    கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம்இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம் ஒன்று இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் சார்பில் வரையப்பட்டது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி,) சங்கத்தினர் நாட்டின் தேசிய வடிவமைப்பு கொள்கை உருவாக்குவதிலும், பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்களை நடத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றனர். நாடு முழுவதும் 24 கிளைகளையும், மையங்களையும் கொண்டு 10,000-க்கும் அதிகமான உறுப்பினர்களை இச்சங்கம் கொண்டுள்ளது. இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள், தொழில் ரீதியான வடிவமைப்பாளர்கள், இது தொடர்பான வணிகம் ஃ நிறுவனங்கள், மாணவர்களை கொண்ட அமைப்பாக இதுதிகழ்கிறது. இவ்வருடம் ஐஐஐடியின் பொன்விழாவை முன்னிட்டு, மாபெரும் வடிவமைப்புகள் குறித்த 7 பாகங்களை காலாண்டு தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளது. இது நிப்பான் பெயிண்ட் இன்டியா நிறுவனத்தின் கூட்டு ஆதரவுடன்… Read more: கோவை சாய்பாபா அழகேசன் ரோட்டில் மிக பிரம்மாண்டமாக 300 அடி அகல சுவர் ஓவியம்