பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ரத்ததான முகாம்..
50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்
டாக்டர் அம்பேத்கர் 67-வது திணைவு தினத்தை ஒட்டி கும்பகோணம் டாக்டர் அம்பேத்கர் ரத்த சேவை மையம் டாக்டர் திருமா ரத்த சேவை மையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது
இம் முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமை வகித்தார்
கிராமப்புறம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட செயலாளர் ஆதி சிவன் அனைவரையும் வரவேற்று பேசினார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜீவா கமலஹாசன் ரத்ததான முகாமை துவங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் சுகந்தி , மருத்துவ செவிலியர் சலீம் பாட்ஷா ,உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் மற்றும் ரத்த சேவை மையத்தின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் .
இதில் ரத்த சேவை மைய ஆலோசகர் குடந்தை மூர்த்தியார் ரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.