திருவாரூரில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையாளர் பண்டகசாலையில், சமத்துவ பொங்கல் விழா
இயற்கையை வணங்கும் திருவிழாவாக தை வருட பிறப்பையொட்டி தமிழர்களால் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை ஒட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழாக்கள் நடத்துவதை ஆண்டுதோறும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழாவான பொங்கல் பண்டிகையை திருவாரூரில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஊழியர்கள் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடினர்.
சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்வின்போது கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அலுவலர்கள் முதல் இருபால் சக பணியாளர்கள் வரை தமிழர்களின் பாரம்பரிய உடையான பெண்கள் புடவைகள் அணிந்தும் ஆண்கள் வேஷ்டி சட்டைகள் அணிந்து வந்து வீட்டில் பொங்கல் வைப்பது போல பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல் வைத்ததோடு, பொங்கல் பொங்கி வந்த நேரத்தில் பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு கரும்பு வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களோடு சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர்
நிகழ்வின்போது மேலாண்மை இயக்குனர் செல்வி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொது மேலாளர் காளிதாஸ் உள்பட உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்