ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243ஐ. திரும்ப பெற வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒன்றிய அளவிலான முன்னுரிமையிலிருந்து மாற்றம் செய்து மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு பணி மாறுதல் உள்ளிட்டவைகளை வழங்குவது தொடர்பான அரசாணை 243 தமிழக அரசால் வெளியிடப்பட்டது
இதனை கைவிட்டு பழைய முறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமைப்படி பதவி உயர்வு, பணி மாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார் வட்டாரச் செயலாளர்கள் அய்யப்பன் அன்பழகன் சண்முகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் ரவி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஈவேரா ஆகியோர் உரையாற்றினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார நிர்வாகிகள் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக மங்கள ராஜன் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும் ஒன்றிய அளவிலான முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு பணி மாறுதல் வழங்க வேண்டும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எமிஸ் வலைதள பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க. வேண்டும். ஈட்டிய உடுப்பு ஒப்படைப்பு அகவிலைப்படி நிலுவைத் தொகை உள்ளிட்டவர்களை வழங்க. வேண்டுமென வலியுறுத்தி ஆசிரியர்கள் உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித்துறையில் பணி புரியும் அனைத்து ஆசிரிய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்