எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.
சீர்காழியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம், பா.ஜ.க மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தார் :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு பகுதியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாவட்ட அவை தலைவர் பி.வி.பாரதி ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி, சந்திரமோகன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன் போகர் ரவி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் மலர் தூவி மரியாதை செய்தார்,
பின்னர் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது பாஜக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.