வலங்கைமானில் அ இ அ தி மு க சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 -வது பிறந்த தினத்தை ஒட்டி அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அ இ அ தி மு க ஒன்றிய, நகரம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் அருகில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர், தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ் .ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜெய.இளங்கோவன், மாநில தொழில் நுட்ப அணி துணைத் தலைவர் என் ராஜராஜ சோழன், நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர். ஜி. பாலா, செம்மங்குடி முனுசாமி மற்றும் ஊராட்சி, ஒன்றிய பிரதிநிதிகள், மகளிர் அணி உட்பட அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *