கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி சுங்கசாவடி, அருகே வட்டார போக்குவரத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மாத விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு துவக்கி வைத்து, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வாகனங்களில் ஒளிரும் வில்லைகளை ஒட்டினார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சியாயிணி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காளியப்பன் (கிருஷ்ணகிரி) கே.எஸ்.துரைசாமி (ஒசூர்) உள்ளிட்ட பலர் உள்ளனர்.