மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு கிளையின் தென்மண்டல கூட்டம்

மதுரையில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது)
எஸ்.கே.எம். (என்.பி) தமிழ்நாடு கிளையின்
தென்மண்டல கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல செயலாளர் உறங்காபுலி தலைமை தாங்கினார்.

எம்பி. இராமன், மதுரைவீரன், சங்க வழக்கறிஞர் அணி தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தேனி மனோஜ், ஆகையால் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி தலைவர் மேலூர் அருண் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவரும் மாநில எஸ்.கே.எம். (என்.பி) கன்வீனருமான பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறது..

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விளை நிலங்களை கொடுக்க மறுக்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கிறது.

பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பேரில் தமிழக அரசும் காப்பீடு நிறுவனமும் கூட்டு சேர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவதை கண்டிக்கிறோம்.
பேரழிவு பெருமழையால் அழிந்து போன விவசாயிகளுக்கு பேரிடர் திட்டத்தில் உரிய இழப்பீடு வழங்காமல் துரோகம் இழைக்கிறது.

நெல், கரும்புக்கு உரிய விலை கொடுக்க மறுக்கிறது..
எனவே உடன் நெல் குவிண்டால் 1க்கு ரூ 3500, கரும்புடன் 1 க்கு ரூ5000 ம் வழங்கிடவும்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்பயிர்களுக்கு ஏக்கர் 1க்கு ரூ 25000ம் வழங்கிடு. தென்னை, வாழை, நிலக்கடலை, எண்ணெய் வித்து பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும்,பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசே பொறுப்பேற்று வழங்கிடவும்,
நில ஒருங்கிணைப்பு சட்டம் – 2023 யை திரும்ப பெற்றிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 29ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்.

எஸ். கே. எம். (என்.பி) சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 13 தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பெருமளவில் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

தென் மண்டல ஒருங்கிணைப்
பாளராக திருபுவனம் ஆதிமூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் மதுரை உசிலம்பட்டி மணிகண்டன், முத்துமீரான், சிவகங்கை கட்டிக்குளம் மாணிக்கவாசகம், தவம், இராமநாதபுரம் தமராக்கி , ராமலிங்கம், கண்ணப்பன், தூத்துக்குடி
அருமைராஜ், திண்டுக்கல் கொடைக்கானல் செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் வந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *