கொக்கிலமேடு
ஓம் ஸ்ரீ வீரபாஞ்சலியம்மன் நாடக சபாவின் ஆறாம் ஆண்டு கலை விழா நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான் குப்பம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பான முறையில் விழா நடைபெற்றது,

இக்கலை விழாவிற்கு திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர்,G.D யுவராஜ் செங்கை மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களின் மாவட்ட தலைவர் R.சம்பத் ,M.N குப்பம் 16வது வார்டு உறுப்பினர் மா.க விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர்.

கலை விழா இரவு 9 மணி அளவில் தொடங்கியது கலை விழாவில் மகாபாரதத்தில் ஒரு பிரிவாகிய அபிமன்னன் விருந்து என்னும் காலாக்கினி சூலாகினி கடோர்கஜன் சண்டை என்று சொல்லக்கூடிய நாடகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாடகத்தை கண்டுகளிக்க திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் திரளாக வந்து நாடகத்தை இரவு முழுக்க பார்த்தனர். நாடகக் கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் பேரூராட்சி மன்ற தலைவர் G.D.யுவராஜ் அவர்கள் ,மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பாக அயோத்தி ராமர் கோயில் பிரசாதத்தையும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெருக்கூத்து நாடகத்தை கண்டு களித்த மக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *