அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை பறித்தது தான் தி.மு.க.வின் சாதனை.

கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் பி
ஆர்.கே .பாரதி மோகன் பேச்சு.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூரில் திருப்பனந்தாள் ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். கருணாநிதி தலைமை
தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் பி
ஆர்.கே .பாரதி மோகன் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் அசோக்குமார் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் மாநகர செயலாளர் ராம ராமநாதன் தலைமைக் கழக பேச்சாளர் கோமுகி தாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம் பி ஆர்.கே .பாரதி மோகன் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, தங்கத்தில் திருமண உதவி திட்டம், அம்மா உணவகம்,
அனைத்து கூட்டுறவு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி திட்டம் என அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை பறித்தது தான் தி.மு.க.வின் சாதனை. 576 தேர்தல் வாக்குறுதிகள்
தி.மு.க. நிறைவேற்றி உள்ளதா என்பதை வாக்காளார்கள் அறிய வேண்டும். அ.தி.மு.க வில் 17 லட்சம் உறுப்பினர்களிலிருந்து 2 கோடி உறுப்பினர்களை அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார்.
எனவே வருகின்ற நாடளுமன்ற தேர்த்தலில் அ.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார்.

முன்னதாக 107 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் மூர்த்தி, ராஜாகுமாரன், ராவணன், ராஜ்குமார் உள்பட திரளான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *