கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே பட்டமளிப்பு விழாவிற்கு சென்றபோது கல்லூரி மாணவி பேருந்தில் மயக்கமடைந்து உயிரிழப்பு …..

போலீசார் விசாரணை….

பேருந்தில் கல்லூரி மாணவி மயக்கமடைந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே
மருதாநல்லூர் நந்திவனம் கிராமத்தில் வசித்து வந்த தமிழரசன் மகள் ராஜ பிரியா வயது 21, இவர் எம்.பி.ஏ .படித்து வருகிறார் இவர் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதாக. வீட்டில் கூறிவிடௌடு தஞ்சைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் தஞ்சையிலிருந்து பேருந்தில் ஏறி ஊருக்கு திரும்பி வந்துள்ளார் அப்போது பாபநாசம் வரும் வழியில் ராஜ பிரியா பேருந்தில் மயக்கமடைந்து விட்டார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பிரியா உயிரிழந்து விட்டார் இதுகுறித்து அவரது தாயார் கஸ்தூரி வயது 39 கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் கல்லூரி மாணவி மயக்கமடைந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது …

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *