சுங்கச் சாவடி பணியை கைவிட கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் நகர வியாபாரிகள்
இணைந்து ஆர்ப்பாட்டம்;-

  ஏ.எம்.விக்கிரமராஜா, டி.பி.வி.
வைகுண்டராஜா பங்கேற்பு;-

ஆலங்குளம்,நெல்லை-தென்காசி சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெறுவதை கண்டித்து, ஆலங்குளத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும்நகர வியாபாரிகள் சங்கம் இணைந்து வருகிற  (பிப்.6) நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மண்டலத் தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில், நான்குவழிச்சாலை பணியின் ஒரு பகுதியாக சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 முன்னதாக நான்குவழிச் சாலை பணிக்கான கருத்துக் கேட்பு கூட்ட நடைபெற்ற போது, சுங்கச்சாவடி கண்டிப்பாக அமையாது என உறுதியளித்த அதிகாரிகள், தற்போது சுங்கச்சாவடி அமைக்கும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

 மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்தால் திருநெல்வேலி-தென்காசி செல்லும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயமும் உள்ளது.
  எனவே, இப்பணியை நிறுத்தக் கோரி ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கம், பல்வேறு சங்கங்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம்  பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் திடலில் நடைபெற உள்ளது.    

 இந்நிலையில், போராட்டம் நடைபெறும் பகுதியை டி.பி.வி.வைகுண்டராஜா, மாவட்டச் செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐவிஎன். கலைவாணன், ஆலங்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண் ரவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *