பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி புருனை தாருஸ்ஸலாம் விருந்து கூடத்தில், தஞ்சாவூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கண்புரை, கண்நீர் அழுத்தநோய், கிட்டபார்வை, தூரபார்வை, கருவிழியில் புண் உள்பட கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஜமாத் சபை தலைவர் சிம்லா நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
மேலும்100-க்கும் மேற்பட்டவர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாத் சபை மற்றும் பாசமலர் வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.