வலங்கைமானில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு வலங்கைமான் ஒன்றிய, நகர அ இ அதிமுக சார்பில், வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜெய.இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் ஜெயபால், தொழில்நுட்ப பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ராஜராஜ சோழன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், நகர அவைத் தலைவர் ரத்தினகுமார்,மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.ஜி. பாலா, எஸ். மூர்த்தி, ரேவதி பன்னீர்செல்வம், தொழுவூர் முனுசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *