பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவிகளுக்கு தொடு உணர்வு சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் மாணவிகளுக்கு தொடுஉணர்வு சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் எம்.மில்டன் ராஜ் அவர்கள் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் ஜோதி கலியமூர்த்தி கலந்து கொண்டு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில்மனித உரிமைகள் பிரிவின் தஞ்சாவூர் மாவட்ட பொதுச் செயலாளர் வி.சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடுஉணர்வு சிகிச்சையை பற்றி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை இலக்கியா மற்றும் பேராசிரியர்கள் எழிலரசி , சரவணன் மற்றும் மாணவிகள்
என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவி நந்தினி நன்றி கூறினார்.