கும்பகோணம் அருகே திருவாய்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு ஆசிரியர் தலைமறைவு.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் தமிழரசன்(37). இவர் திருவாய்ப்பாடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பிரிவு பாடம் எடுக்கும் ஆசிரியராக தமிழரசன், பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக. மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே,
அவர்கள் மாணவியுடன், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் திருப்பனந்தாள் காவல்துறையினர், ஆசிரியரான தமிழரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீது மாணவி புகார் அளித்திருப்பதை அறிந்து ஆசிரியர் தமிழரசன் தலைமுறைவாகியுள்ளார். தற்போது காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *