கிருஷ்ணகிரி மாவட்டம்
இன்று (20.02.2024) நடைபெற்ற தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சார்பாக தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி தெரிவித்தார்.
மேலும் தென்னையில் பல ஆயிரம் கோடி வருமானம் வரக்கூடிய இந்த தென்னை விவசாயத்திற்கு தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தென்னை மதிப்புகூட்டப்பட்ட பூங்கா ஒன்றை அமைக்க கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 10 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வருவாய் கிடைக்கும். தென்னையில் இருந்து கிடைக்கும் 25ற்கும் மேற்பட்ட மதிப்புகூட்டப்பட்ட பொருட்களான தென்னைநார், தேங்காய் எண்ணெய், வெர்ஜின் ஆயில், தென்னை பவுடர், கிரீம், நீராபானம், தென்னை சார்க்கரை, தேங்காய் ஓட்டில் இருந்து கிடைக்கும் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு உலக மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், அரசு தென்னை மதிப்புகூட்டப்பட்ட பூங்கா அமைக்க வேண்டுமென அரசம்பட்டி தென்னை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.