புதுவை பண்டசோழநல்லூர் அருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில்  செவி மற்றும் வாய் சுத்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மார்ச் மூன்றாம் தேதி உலக செவி பாதுகாப்புத் தினமும், மார்ச் 20ஆம் தேதி வாய் மற்றும் பல் சுத்த தினமும் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பண்டசோழநல்லூர் அருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுவாமிராஜ் தர்மகான் தலைமை தாங்கினார்.

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்  முகந்தி ஏழுமலை, பல் மருத்துவர் ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் மாணவர்களுக்கு காது பாதுகாப்பு, காது சுத்தம் குறித்த விழிப்புணர்வை டாக்டர் முகந்தி ஏழுமலை விளக்கினார்.

வாய் சுத்தம் மற்றும் பல் சுத்தம் குறித்த விழிப்புணர்வை டாக்டர் ஹெலன் மாணவர்களுக்கு விளக்கினார். ஆஷா பணியாளர்கள் ஆனந்தநாயகி, புவனா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *