வலங்கைமானில் அதிமுக சார்பில் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் அஇ அதிமுக சார்பில் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி போதைப்பொருள் புழக்கத்தைகட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் வலங்கைமான் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே. சங்கர், கிழக்குஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜெய. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி,ஆர்.ஜி. பாலா, தொழுவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பி கலந்து கொண்டனர்.