வக்பு வாரியக் கல்லூரி விழா” மதுரை முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் முனைவர் எஸ்.என்.ஏ.ஷாசுலி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அரசுத்துறை தலைவர் முனைவர் சேக் முகமது இலியாஸ் அவர்கள் இறை வணக்கத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.ஜெயஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டு காலந்தோறும் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மீ.தெளலத் பேகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.செல்வி கதீஜா பேகம் நன்றி கூறினார். கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இந்நிகழ்வை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.