திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 55 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்
அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐம்பத்து ஐந்து லட்சம் மதிப்பீட்டில் 1925 சதுர அடி பரப்பளவில் மூன்று புதிய வகுப்பறைகள் மற்றும் இரண்டு புதிய. கழிவறைகளும் அமையப்படவுள்ளது
அதனைத்தொடர்ந்து கூத்தாநல்லூர் நகராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள. புதிய சார்பதிவாளர் அலுவலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது


நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர் கூத்தாநல்லூர் நகர்மன்ற துணைத்தலைவர் சுதர்ஷன் அம்மையப்பன் ஊராட்சி மன்றத்தலைவர் முருகதாஸ் பள்ளி தலைமையாசிரியர் அருளாளன் வட்டாட்சியர்கள் செந்தில் (திருவாரூர்)கார்த்திக் (கூத்தாநல்லூர்) உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *