பூதங்குடி எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அறக்கட்டளை வழியாக நலத்திட்ட உதவிகள் கடலூர் மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர்
சேத்தியாதோப்பு
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பூதங்குடியில் இயங்கி வரும் எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்விப் பணி மற்றும் சமூக பணி என தன்னை பொதுச் சேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டு கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் தொண்டாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்துடன் இணைந்து கடலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆதரவற்ற மகளிருக்கு தனது சீயோன் சோசியல் எஜுகேஷனல் சர்வீஸ் ட்ரஸ்ட் மூலமாக சுமார் ஆறு லட்சம்(6,00,000) மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 60க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் இணைச் செயலாளர் டாக்டர் சாமுவேல் சுஜின் தாளாளர் எஸ் டி சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.