வலங்கைமானை அடுத்த அரவூர் கிளியூரில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா, கொடியேற்று விழா, நூற்றாண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த அரவூர் கிளியூரில் மாற்று கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா, கொடியேற்று விழா, நூற்றாண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தலைமை வகித்தார்.
நூற்றாண்டு துவக்க கொடியை ஏற்றி வைத்து, மாற்றுக் கட்சியிலிருந்து 324 பேரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
முதல் கொடியை முன்னாள் கிளை செயலாளரும், முன்னோடி உறுப்பினருமான அம்மாசி ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது கொடியை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கு.ராஜா ஏற்றி வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி நூறாண்டை துவங்க இருப்பதால் நூற்றாண்டு விழா துவக்க கொடியை ஏற்றி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், மாதர் சங்க ஒன்றிய தலைவர் சுதா, செயலாளர் தேவிகா, இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணை செயலாளர் லெனின், அரையூர் கிளை செயலாளர் சண்முகம், மாணிக்கமங்கலமகிளை செயலாளர் பூசாந்திரம், பைத்தஞ்சேரி கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.