புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி ஆர்விபி மருத்துவமனை மற்றும் ஆர்விபி அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் புவனகிரி திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆர்வி பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகாமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புகழேந்தி , ஆர்விபி மருத்துவமனை மருத்துவர் கதிரவன் , மற்றும் மருத்துவர் மங்களேஷ்வரன் ஆகியோர் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வகையான மதிய உணவு வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர்கள் ஆசைமணி செல்வம் வெற்றி அருணாச்சலம் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.