பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 301-பாகங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..
அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் 301-பாகங்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள பாதுகாப்பறையில் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, பாதுகாப்பு அரையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலருமான முத்துகிருஷ்ணன்,பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஆயுதம் தாங்கிய போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.