திருவள்ளூர்
சின்னம்பேடு ஊராட்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் என்கின்ற வைஷ்ணவி கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோயில் ஆகும் தற்போது இக்கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது
பின்னர் தற்போது ஒரு சில திருப்பணிகள் நடைபெற்ற கடந்த இரு தினங்களாக வாஸ்து சாந்தி யாகசாலை வேள்வி மசாதீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை 8.30 மணி முதல்9.30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னம்பேடு கிராம பொதுமக்கள் மற்றும் சந்தான பட்டாச்சியர் தலைமையில் நடை பெற்றது.