சேத்தியாதோப்பு
பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023 – 24 ஆம் கல்வியாண்டில் பயின்ற எல். கே. ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். கதிரேசன் உலக வங்கி ஆலோசகர்,கௌரவ பேராசிரியர், முன்னாள் டீன் மற்றும் இயக்குனர் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் புகழேந்தி ஸ்ரீ சுபம் கேஸ் ஏஜென்சி முன்னாள் செனட் கவுன்சில் மெம்பர் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த ஆண்டு கல்வி பயின்ற எல். கே. ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு கேடயமும் பட்டையை சான்றிதழ்களும் வழங்க பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர். சாமுவேல் சுஜின் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பேச்சு போட்டிகளும் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர் கதிரேசன் மாணவர்கள் சமுதாயத்தில் எத்தகைய நல்லொழுக்கங்களை கொண்ட மனிதர்களாக வாழ வேண்டும் என்றும் சமுதாயத்தில் திறம்பட வாழ்வதற்கு இன்றைய கல்வி எவ்வாறு உதவி செய்கிறது என்றும் சமுதாய முன்னேற்றத்தில் கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவம் பற்றியும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் முன்னிலை வகித்தார்.