கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார முன்னாள் அமைச்சரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தலைமையில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு
தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, முன்னாள் அமைச்சரும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இசக்கி சுப்பையா தலைமையில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் கல்லிடை குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பேசிய இசக்கி சுப்பையா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் திமுக – பாஜகவின் இடையே நடக்கும் சம்பவங்கள் மூலமாக இவர்களின் கள்ள உறவு வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது. அம்மாவின் ஆட்சிக்காலத்தில் பிறப்பு முதல் கடைசி காலம் வரை மக்களுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வில் ஒதுக்கீடு கொடுத்தது.
அதிமுக ஆட்சியில் வளர்ந்த நெல்லை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அம்மாவின் அரசுக்கு துரோகம் செய்தவர், இந்த துரோகம் செய்தவருக்கா உங்கள் ஓட்டு, ஏற்கனவே இருக்கின்ற திமுக எம்பி ஞானத்திரவியம் ஐந்து வருடமாக இந்த தொகுதி பக்கமே வரவில்லை அவருக்காக உங்கள் ஓட்டு என கேட்டு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..