தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அமைந்துள்ள ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜிக்கு 9 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பருவநிலை /தட்ப வெப்பநிலை மாற்றம், புவி வெப்பம் அடைந்து அதனால் ஏற்படும் புவி வெப்ப அலை அதிகரித்தலை தடுக்க ஸ்ரீ ஜிஜி லா அல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தின் சார்பாக 1000 மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து பொது இடங்கள், வெட்டவெளிகள், சாலையோரங்களில் ஆசிரமத்தின் சார்பாக மரங்களை நட்டு புவி வெப்பமடைந்து அதனால் ஏற்படும் வெப்ப அலைகளை தடுத்து தமிழ்நாட்டினை பசுமையான நாடாக மாற்ற நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருளாசி பெற்றுச் சென்றனர்.