அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சால்வார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள வருகை இந்த அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன் அவர்களுக்கு விழா கமிட்டியினர் சார்பாக மேளதாளங்கள் முழங்க வரவேற்று
மலர்மாலை அணிவித்து பூஜை பொருட்களும் வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று கோவில் வளாகப் பகுதியில் சிவாச்சாரியார்கள் வேள்வியாக யாகம் வளர்த்து கால யாக பூஜையுடன் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகளும் தீபாதாரணைகளும் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித ஸ்தலங்களில் இருந்துகொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலை சுற்றி வலம் வந்து பின் வானத்தில் கருடன் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சுவாமிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாரணைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சால்வார்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் நிர்வாகி ஏ.எல்.சீனிவாசன் மற்றும் ஐயப்ப முருக பக்தர்களும் கலந்து கொண்டனர்…