எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு – வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்று பேசினார்.
இரண்டு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர் களாக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மண்டல செயலாளர் முஜீபூர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜூன் 21 கட்சியினுடைய 15 ம் ஆண்டு துவக்க தினமான அன்று மதுரை மாவட்டம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் நடத்துவது , ஜூன் 25 ல் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *