கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (CODCEA) 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அவினாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னால் தலைவர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் புதிய நிர்வாகிகளாக பொறியாளர்கள் ரமேஷ் குமார் தலைவராகவும்,விஜயகுமார் துணை தலைவராகவும்,செயலாளராக ராமலிங்கம், பொருளாளராக ரவிக்குமார் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்..பதவி ஏற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிபாகா பட்டய தலைவர் பொறியாளர் நாராயணன்,தமிழ்நாடு கல் குவாரி தலைவர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கி பதவி பிரமாணம் செய்து வைத்தனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் புதிய தலைவர் ரமேஷ் குமார், சங்க உறுப்பினர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்,குறிப்பாக உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு,உள்ளிட்டவற்றை செயல்முறை படுத்த உள்ளதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் துணை செயலாளர் அர்ஜூன் ஸ்ரீதர்,துணை பொருளாளர் மணிகண்டன் மற்றும் அலுவலக நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்..இதில் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமி நாராயணன்,தங்கவேல்,ராஜரத்தினம் உட்பட பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்…