மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது மலைநகர் பகுதி இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலைநகர் 13-வது வார்டு பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சுமார் பத்து வருடங்களாக மிகப்பெரிய
புளியமரம் ஒன்று உள்ளது.

இப்புளிய மரம் அப்பகுதியில் செல்லும் மின்சார ஒயர்களுக்கு இடையே உள்ளதால் அடிக்கடி மின்மாற்றியில் பழுதடைந்து கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை மின்வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுத்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர், ஆகவே ஏதேனும் ஆபத்து ஏற்படுத்தும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *