பொன்னேரி

அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு மயான பாதை, செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை, ஆக்கிர மிப்பு அகற்றம் உள்ளிட்ட கோரிக் களை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஜமாபந்தியில்  மனு அளித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.இதில் பொதுமக்கள் தங்களது கோரிக் கைகள் குறித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர். 

அதன்படி ஒவ்வொரு குறுவட்ட த்தில் வருவாய் துறை சார்பில் தீர்க்கப்படும் கோரிக்கைகள் குறி த்து பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது முக்கிய கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி யான தீர்வு கண்டு வருகின்றனர்.  

இந்த ஜமாபந்தி நிகழ்வானது மாவட்ட அலுவலர் அசோகன் தலைமையிலும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்படி பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தி ற்கு உட்பட்ட அத்திப்பேடு ஊராட்சி க்கு கோரிக்கை மனுக்கள் பெறப்ப ட்டது. 

அப்பொழுது அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அத்திப்பேடு ஆர் ரமேஷ் தங்களது ஊராட்சிக்கு உட் பட்ட  அத்திப்பேடு கிராமத்திற்கு   ஊராட்சி மன்றத்தின் சார்பாக மற்றும் பொதுமக்களின் சார்பாக பொன்னியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை, மற்றும் மயானத் திற்கு செல்லும் பாதை, மற்றும் கிராம நத்தம் ஆக்கிரமிப்பு, உள்ளி ட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *