தேசத்திற்காக மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுத் தந்து நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் மீது தொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பாலியல் தொந்தரவுகளை கண்டித்து தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு பொறுப்பான மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிஜேபியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்ஜ் பூஷன் சிங் அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் போராடிக் கொண்டு வருகிறார்கள்.
தற்போது ஆளக்கூடிய மோடி அரசு அவர்களுடைய போராட்டத்தை முடக்கக் கூடிய வகையில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலும் போராட்ட வீராங்கனைகளை கைது செய்து இருப்பதை கண்டித்து அகில இந்திய அளவில் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக டெல்லியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பாக திங்களன்று காலை சமயநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள சங்கம் மாவட்டத் துணைத் தலைவர் பி.நாகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் துவக்கி வைத்து பேசினார்.
அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.மலர்விழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் பேசினர். நிறைவு செய்து வைத்து சிஐடியூ மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன் ஆகியோர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்டப் பொருளாளர் கௌரி, நிர்வாகிகள் மலை.கண்ணன், மூர்த்தி, பொன்ராஜ், பாண்டி, மகாலட்சுமி, இந்திரா, விவசாயிகள் சங்க துணைத் தலைவர் அய்யாவு, நிர்வாகிகள் சித்திராதேவி, ராதாகிருஷ்ணன், உட்படபலர் கலந்து கொண்டனர்.