இதில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் ஆரம்ப சுகாதார நகர் நல மையத்தை ரிப்பன் வெட்டி , பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. பொது மக்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பெரிய கடை வீதி பகுதி 1 செயலாளர் மார்க்கெட் மனோகரன் MC , மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பொறியாளர் விமல் ராஜ், பெரிய கடை வீதி பகுதி 1துணை செயலாளர் முத்து முருகன், பகுதி 2துணை செயலாளர் முருகேசன், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.