சோழவந்தான்
விக்கிரமங்கலம் அருகே வடகாடுபட்டியில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் விழா பூஜைகள் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது.
பட்டர்கள் ஸ்ரீபாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை தொடங்கி வேதமந்திரங்கள் ஓதி தொடர்ந்து மூலவர் பட்டச்சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பின் சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறும்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழா ஏற்பாடுகளை ஐந்துபேர் ஆண்டிதேவர் வடகையறா,மற்றும் எட்டூர் கிராமம் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.