மணலி அடுத்த மாத்தூர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள பேட் மிட்டன் அகடெமியின் சார்பில் சிறுவர் சிறுமிகளின் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி துவங்குவதை முன்னிட்டு அவர்களின் மன அழுத்தத்தை போக்கும்
வகையில் சிறுவர் சிறுமியர்களுக்கு இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

அகாடமியின் நிறுவனர் தமிழ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பா.ஜ.க. வடசென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எ .குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.இதில் மணலிகுமார் , சுந்தர்ராஜன், ஆகியோர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.

மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசுகள் ‌என பதக்கமும் சான்றிதழும் வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *