சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…
இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஏழைகளின் பசி போக்க உதவுதல், பொருளாதாரம் இல்லாமல் தவிப்போருக்கு உதவுதல் போன்ற தன்னலமின்றி உதவிகரம் நீட்டும் இஸ்லாமிய சகோதரர்களின் கருணை உள்ளத்தை கண்டு எப்போதுமே நாங்கள் நெகிழ்ச்சி கொள்கிறோம் என்று சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் A.சுரேஷ் குமார் மற்றும் பிஆர்ஓ அட்வகேட் T.G.மனோகர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்கள்