பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது. உலக
அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
மலைக்கோயிலுக்கு தேனிமாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் . சாந்திமணிபாலன் சந்திரசேகர்,சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப் செயலாளர் சிவகுமார், பொருளார் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர். 2/7/23 ஞாயிற்றுகிழமை மாலை பெளர்ணமி கிரிவலமும் அண்ணதானமும் நடைபெறும் என்று குழுவின் சார்பாக தெரிவித்தனர்.