நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பழைமை வாய்ந்த மாதா பேராலயம் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா கோயில் தனியாக உள்ளது. இந்த கோயிலில் மும்பை வசாய் பகுதி மீனவர்களால் 10 நாள் விரதம் இருந்து கொண்டாடப்படும் ஆண்டு ப்பெருவிழா கொடி யேற்ற த்துடன் வேளாங்கண்ணி பேரால யத்தில் தொடங்கியது. முன்னதாக, பேராலய ஆலய பங்குத்தந்தை அற்புத ராஜ் சிறப்புத்திருப்ப லியை செய்து வைத்தார். முன்னதாக கொடியை புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கொடி ஊர்வலமும் நடைபெற்றது. ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய கொடி ஊர்வலம் பேரணி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் 15ம் தேதி நடைபெறுகிறது வசாய் பகுதி மீனவர்கள் ஆயிரக்க ணக்கில் விரதமிருந்து ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.