ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் வைக்கம் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா
திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெங்கராஜ் ஈ வே ரா தலைமை வைத்தார் திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி பகுத்தறிவு ஆசிரியர் பணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்திராவிடர் கழக பேச்சாளர் பூவை.புலிகேசி ஆகியோர் சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் வீரையன் முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனியாண்டி திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்திமாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ஆறுமுகம், நன்னிலம் ஒன்றியத் தலைவர் கரிகாலன் திருவாரூர் நகரத் தலைவர் ராஜேஷ், தி.க நகர செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு வைக்கத்தில் நடைபெற்ற மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர்களின் வரலாறு அறியும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் மாதம் தோறும் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர்களை புதுப்பித்தும்புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது
கூட்டத்தில் திருவாரூர் நகர தலைவராக எஸ்.ராஜேஷ் செயலாளராக க.மாதவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் நன்னிலம் ஒன்றியத் தலைவராக எஸ்.கரிகாலன் செயலாளராக மா.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவராக அ.செல்வம் செயலாளராக அ.கோபி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்
பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவராக கோ.செந்தமிழ்செல்வி தேர்வு செய்யப்பட்டார் நிகழ்வின் முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ரெ.புகழேந்தி வரவேற்றார் இறுதியாக திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் அ.செல்வம் நன்றி கூறினார்