எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவ-மாணவிகள் கணக்கிட்டு வருகின்றனர். இது தவிர நிர்வாக ஒதுக்கீட்டிலாவது இடம் கிடைக்குமா என்ற எதிர் பார்ப்பிலும் காத்து இருக்கின்றனர். மேலும் அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆவலில் உள்ளனர். மருத்துவ கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மருத்துவ கனவில் இருக்கும் மாணவ-மாணவிகள் யார் யாருக்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கலந்தாய்வு தொடங்கிய பிறகு தான் தெரிய வரும்.