நாமக்கல்
நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் உற்பத்தி பொருட்களை கையாளும் லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்கங்களின் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்காக நாமக்கல்,சேலம், சங்ககிரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்ட லாரிகளை இயக்கி வந்தோம் தற்போது
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான லாரிகள் தொழில் செய்து வந்தன.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஆலையை திறப்பதற்கு நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.